” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பணி…
பணிவே பண்பின் மூலதனம்
பணிதல் அன்பின் அடையாளம்
மொழிக்கே உள்ள முதலீடு
பெரியோர் பணிதல் பெரும்பேறு

உளமாய் பணிதல் உளப்பேறு
வரமாய் பலபணி வாய்ப்பாகும்
பணி செய்து வாழ்தல் தொண்டாகும்
பலரின் வாழ்வே தொடராகும்
அரும்பணியாற்றும் அகல்விளக்காய்
அர்ப்பணப் பொழுதின் ஒளிவிளக்காய்
எத்தனை பணிகள் எமக்காக
என்றும் வழி தரும் விளக்காக
சுற்றும் புவிக்குள் சுடரிடுமே
சுழலும் வாழ்வாய் புடமிடுமே
ஒய்வே அற்ற கடிகாரம்
உலகை உணர்த்தும் உபகாரம். நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan