வசந்தா ஜெகதீசன்

சித்திரை வந்தாலே …
பருவத்தின் எழில் மிடுக்கு பசுமையின் தனித் தோப்பு
பகலெனும் ஒளி வீச்சு
படர்கின்ற சித்திரையில்
பாரெங்கும் விழாக்கோலம்
ஊரெங்கும் கொண்டாட்டம்
புள்ளினங்கள் இசைபாடும்
பூவினங்கள் மலர்வாகும்
வண்டினத்து ரீங்காரம் வயல்தோப்பு விளைவாகும்
இயற்கையே கருத்தரிக்கும்
சித்திரையின் செல்வாக்கு
சிறப்பான வரவேற்பு
தமிழர் புத்தாண்டே
தைரியத்தின் பேரழகு
மெல்ல ஒளி நிறைத்து
மேதினியை வசமாக்கும்
சித்திரை வந்தாலே
சித்தமும் பிரகாசம்
குளிரின் தடை விலத்தி
குதூகலிக்கும் உல்லாசம்!
இயற்கைப் பேரழகின்
இங்கிதத்தின் வரவேற்பு
காலத்தின் முகவரியாய் கனிகின்ற கலகலப்பு!
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading