நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆறுமோ ஆவல்…
வீரத்தின் வாழ்வும்
வெற்றிச் செறிவும்
பற்றிப் படர்ந்திட்ட
தமிழின மிடுக்கில்
தளர்ச்சியின் படிவு
தாங்கிட முடியா
வலியின் சுவடுகள்
மீளவும் எழுத்திலும்
படிகளின் பதிவில்
ஆறுமோ ஆவல்

இருநிலைக் கூறாய்
இடைவெளி வாழ்வாய்
தளர்ச்சியில் நம்மினம்
தன்னம்பிக்கை உறுதியில்
ஆறுமோ ஆவல்

வானொலி ஏடு
வளமெனத் தொடங்கி
பாமுக ஆறாய்
பாரினில் பாய்ந்து
பரவசத் தமிழில்
பல்கிப் பெருகிடும்
இளையோர் திறனில்
ஆறுமோ ஆவல்..

வற்றாச் சுரங்கமாய்
வண்டமிழ் அமுதம் செம்மொழிச் செந்தமிழ்
செழுமையில் ஆறுமோ ஆவல்!
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan