வசந்தா ஜெகதீசன்

“வழிகாட்டி”
வழிகாட்டி என்றிடும் வாய்ப்பிற்குள் பலராய்
வலம் வந்து சிந்தையினை தட்டுகிறார் பலமாய்
உலகிலே எமை ஈன்ற தாய் தந்தை முதலாய்
உரித்ததாகும் வாழ்விற்குள் பலராவர்-உறவாய்

வாய்ப்புக்கள் பலநூறு வாசலினைத் தட்டும்
வருங்கால முன்னேற்றம் எண்ணமாய்ச் சுற்றும்
பயமறியா கன்றுபோல் பருவங்கள் கரையும்
உய்த்தறியா சிந்தைகள் உபாதையிலே முடியும்

அனுதினமும் நாம் வாழும் வாழ்க்கையின் புரட்சி
எத்தனையோ செதுக்களின் உளியாற்றும் உயர்ச்சி
அயராத பணிக்குள்ளே எத்தனையோ பேர்கள்
ஆக்கிநிற்கும் வழிகாட்டல் வாழ்க்கையின் வேர்கள்

ஒற்றைக்கால் தூக்கிநிற்கும் கொக்குப் போல் நாங்கள்
உறுமீன்கள் வரும்வரையும் காத்திருத்தல் முறையா?
வழிகாட்டி தந்தோரின் வழிமுறையை பற்றி
வழிகாட்டி வாழ்வோமே வரைமுறையை ஆக்கி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading