மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

“வழிகாட்டி”
வழிகாட்டி என்றிடும் வாய்ப்பிற்குள் பலராய்
வலம் வந்து சிந்தையினை தட்டுகிறார் பலமாய்
உலகிலே எமை ஈன்ற தாய் தந்தை முதலாய்
உரித்ததாகும் வாழ்விற்குள் பலராவர்-உறவாய்

வாய்ப்புக்கள் பலநூறு வாசலினைத் தட்டும்
வருங்கால முன்னேற்றம் எண்ணமாய்ச் சுற்றும்
பயமறியா கன்றுபோல் பருவங்கள் கரையும்
உய்த்தறியா சிந்தைகள் உபாதையிலே முடியும்

அனுதினமும் நாம் வாழும் வாழ்க்கையின் புரட்சி
எத்தனையோ செதுக்களின் உளியாற்றும் உயர்ச்சி
அயராத பணிக்குள்ளே எத்தனையோ பேர்கள்
ஆக்கிநிற்கும் வழிகாட்டல் வாழ்க்கையின் வேர்கள்

ஒற்றைக்கால் தூக்கிநிற்கும் கொக்குப் போல் நாங்கள்
உறுமீன்கள் வரும்வரையும் காத்திருத்தல் முறையா?
வழிகாட்டி தந்தோரின் வழிமுறையை பற்றி
வழிகாட்டி வாழ்வோமே வரைமுறையை ஆக்கி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading