வசந்தா ஜெகதீசன்

பள்ளிக்காலம்….
பருவங்கள் பலதாய்
பள்ளிக்காலம் முதலாய்
பழகிய பண்புகள் உயர்வாய்
படருதே வாழ்வாய்
அழகிய கோலம்
அழித்து அழித்து “அ” எழுதிய
காலம்
வரைமுறையற்ற வாழ்க்கைப் பாடம்
வரமாய் கிட்டிய கல்வியின் சாரம்

சுமையே அற்று சுதந்திர உலகில்
பறவைகள் போல பாடிப் பறந்தோம்
உயர்வுகள் கிட்ட உலகையே மறந்தோம்
அன்பில் நட்பு ஆட்சியில் வானம்
எல்லைகளற்ற பள்ளியின் காலம்
இனிதே மலர்ந்த வாழ்வின் வசந்தம்
இனியும் வருமா இந்த இளவேனில் காலம்!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading