சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சந்தம் சிந்தும் கவி..
பேரன்பின் கூடமிது
பிரியமான பாசமிது
அன்பாலே ஆளும்
அரவணைத்துப் பேசும்
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்த மாடம்
எண்மராய் நாங்கள் வாழ்ந்திருந்த கூடம்
பாசத்தின் பறவைகளாய்
பட்டாம் பூச்சிகளாய்
சுற்றி வந்த மனையே
சொந்தங்கள் கூடிடுமே
சொர்க்கமாய் மாறிடுமே
சின்னச் சின்ன சேட்டைகளில்
சிறகடித்து மகிழ்வோம்
முற்றமதில் விளையாட்டு
முழுநிலாவில் கூட்டாஞ் சோறு
கூட்டுறவின் பொற்காலம்
உடன்பிறப்புக்களின் வாழ்காலம்
வருமா இனிமேலும்
வசந்ததின் பிறந்த மனை
வற்றாத அன்பின் இணை!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan