வலியும் வழியும்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 232

காட்டில் வளரும் மூங்கில்கள்
சிறுதுண்டாக வெட்டி துளை போடும்
போது வரும் வலியை தாங்குவதனால்
பிறக்கும் இசையை பலரும் இரசிக்க

இளமையில் ஏற்பட்ட வறுமை
வழியை தரும் என்பது உண்மை
ஊக்கத்துடன் முயற்சி செய்ய
வலிமறந்து உயர்ந்திட வழிபிறக்கும்

பெற்றோர் தாங்கும் வலி
பிள்ளைகள் சிறக்க வழி
வகுக்கும் என்பது நியதி
வலியின்றி சிறந்த வாழ்வேது

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading