பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வலியும் வழியும்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 232

காட்டில் வளரும் மூங்கில்கள்
சிறுதுண்டாக வெட்டி துளை போடும்
போது வரும் வலியை தாங்குவதனால்
பிறக்கும் இசையை பலரும் இரசிக்க

இளமையில் ஏற்பட்ட வறுமை
வழியை தரும் என்பது உண்மை
ஊக்கத்துடன் முயற்சி செய்ய
வலிமறந்து உயர்ந்திட வழிபிறக்கும்

பெற்றோர் தாங்கும் வலி
பிள்ளைகள் சிறக்க வழி
வகுக்கும் என்பது நியதி
வலியின்றி சிறந்த வாழ்வேது

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading