சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம்

கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும் பந்தம்
திருமண இணைவிலே புதியதாய் சொந்தம்

ஒருவர் குறையை
இன்னொருவர் அறிவார்
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிவார்
மாற்றம் கண்டாலும் அன்பினை பொழிவார்
போற்றும் வாழ்வினை பூமியில் கழிப்பார்

எது வந்தாலும் பிரியாது பந்தம்
முதுமை வரை கூடவரும் சொந்தம்
தாழ்விலும் இவர்கள் மகிழ்ச்சியின் இனம்
வாழ்வே ஆகிவிடும் ஒரு பூங்காவனம்

இன்பத்தின் இராகம் இதயங்களால் மீட்டும்
அன்பினை ஒருவர் இன்னொருவர்க்கு ஊட்டும்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட இறைவனின் இந்நிகழ்வு
அர்த்தமுள்ள சடடங்கிதனால் உறவுகளுள் மகிழ்வு

ஜெயம்
02 -02 – 2026

Author: