மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம்

கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும் பந்தம்
திருமண இணைவிலே புதியதாய் சொந்தம்

ஒருவர் குறையை
இன்னொருவர் அறிவார்
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிவார்
மாற்றம் கண்டாலும் அன்பினை பொழிவார்
போற்றும் வாழ்வினை பூமியில் கழிப்பார்

எது வந்தாலும் பிரியாது பந்தம்
முதுமை வரை கூடவரும் சொந்தம்
தாழ்விலும் இவர்கள் மகிழ்ச்சியின் இனம்
வாழ்வே ஆகிவிடும் ஒரு பூங்காவனம்

இன்பத்தின் இராகம் இதயங்களால் மீட்டும்
அன்பினை ஒருவர் இன்னொருவர்க்கு ஊட்டும்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட இறைவனின் இந்நிகழ்வு
அர்த்தமுள்ள சடடங்கிதனால் உறவுகளுள் மகிழ்வு

ஜெயம்
02 -02 – 2026

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading