பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வாழ்க்கையோ வாழ்க்கை

ஜெயம் தங்கராஜா

கவி 744

வாழ்க்கையோ வாழ்க்கை

சிரிப்பு எங்கே சிரிப்பு எங்கே
எங்கே போனது
துரிதகதி வாழ்க்கையினால் செயலிழந்து போனது
பேச்சு எங்கே பேச்சு எங்கே
என்ன ஆனது
போச்சு போய் பல நாளாச்சு
என்று ஆனது

வலையொலியில் கானொலியை இரசித்தபடி
அம்மா ஒருமூலையில்
அலைபேசியில் எதையெதையோ பார்த்தபடி
அப்பா ஒரு மூலையில்
பிள்ளைகள் எங்கேயென தேடினால்
மேலறையில் படிக்கின்றார்கள்
தொல்லை யாரும் தராதபடி
அறையைப்பூட்டி படிக்கின்றார்கள்
விரலை கைபேசியில் தேச்சு தேச்சு ரேகையும்தான் அழிஞ்சுபோச்சு
குரலை வெளிக்காட்டாது தலைமுறைக்கு மவுணம் முத்திப்போச்சு
தாயகத்து ஆர்ப்பரித்த நிலமை அடியோடு விலகுதிங்கே
பேயகமாய் வீடு மாறி மவுணமாக உருவங்கள் உலவுதிங்கே

ஜெயம்
09-10-2024

Nada Mohan
Author: Nada Mohan