பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வாழ்வில் கலையும்….தொடரா நிலையும்

ரஜனி அன்ரன்

“ வாழ்வில் கலையும்….தொடரா நிலையும் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 06.02.2025

வாழ்க்கை என்பது ஓவியம் – அதில்
வண்ணம் தீட்டும் காவியம் கலைகள்
கலையும் வாழ்வும் இணைந்த கூடு
கலையென்பது மனஉணர்வின் வெளிப்பாடு
கலையும் பண்பாடும் எம்மினத்தின் வேர்
கால ஓட்டத்தில் கலைகள் – இன்று
கட்டுக்களை உடைத்து கட்டுமீறிச் செல்கிறதே !

தமிழின் தொன்மைக்குச் சான்றாதாரம்
தமிழர் வாழ்வின் பிரதிவிம்பம்
மனங்களைப் பண்படுத்தும் ஆயுதம்
மயங்க வைக்கும் மாஜா ஜாலம்
பண்பாட்டு ஆழத்தின் உச்சம் கலைகளே !

இன்றைய புலத்து வாழ்வினில்
மரபுக்கலைகள் மறைந்து போச்சு
மாற்றான் கலைகள் மவுசாச்சு
மரபுக்கலையைப் பயில்வோரும்
பவிசுக்காய் அரங்கேற்றம் செய்துவிட்டு
சொகுசுக்காய் வாழுகின்றார் தொடராநிலையோடு !

ஆனாலும் தொடர் ஆண்டாக பாமுகமும்
மண்வளக் கலைகளை மறக்காது
மரபுக்கலைகளைப் பேணியபடி
புலத்து சிறார்களையும் இணைத்தபடி
கலகலப்போடு மேடையேற்றி மகிழுது
தெருவிழாக்களும் பண்டைய கலைகளை
திருவிழாவாக்கி எங்கள் பகுதியில்
தெருவே ஒன்றுகூடி பண்பாடு மாறாது
ஆண்டு தோறும் அரங்கேற்றியும் மகிழுது !

Nada Mohan
Author: Nada Mohan