புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று விடைதேடி நிற்கிறது
முடியாத செயலதனை முடித்திடவே செய்கிறது
படியாத கல்வியினால் பயன்கூட இல்லையே
நடியாத நல்வாழ்வின் நல்லொளியும் பெருகிடுமே!

கடிகாரம் ஓடுகையில் காலமும் ஓடிடுமே
கண்போல காரியமும் கவனத்துடன் முடிந்திடுமே!
துடிப்போடு முயற்சியும் துளிர்விடுமே நாளை
தூண்டலுடன் முயல்வும் செய்திடும் வேளையிலே

விடியாத இரவென்று ஏதுமில்லை
விண்ணதிர ஒளியுமே தெரிந்திடும்
முடியாத முயற்சியும் முயன்றிட்டால்
முன்னேற்றம் துளிர்விடும் விடியலாய்

நகுலா சிவநாதன் 1753

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading