கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

விடியாத இரவொன்று..

வியாழன் கவி 1947..

விடியாத இரவொன்று…

விடியாத இரவொன்று
இங்கில்லை என்றே
நம்பிக்கை கொண்டு
நகரும் வாழ்வியலில்
மடியாத துயரில்ல
மாதவமே செய்தவராய்
யாசகமே கேட்கின்றோம்
நேசமுடன் வாழ்ந்திடுக..

பூசனைகள் தேவையில்லை
போதனைகள் தேவையில்லை
வேதனை தந்திடாதீர்
வென்றிடவே துணையாவீர்
மூத்தோரைப் பேணிடப்
பூத்ததொரு நாளிலே
நீத்தவர் போலவெண்ணாது
சேர்த்திணைத்து வாழ்ந்திட
விடியும் ஒரு பொழுதாகும்
வியந்தே தான் நோக்குவீர்..
சிவதர்சனி இராகவன்
14/3/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading