பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வெறுத்ததே விருப்பதாய்…

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 2091

வெறுத்ததே விருப்புமாய்..

ஓடியாடி வளர்ந்த மக்காள்
ஓய்வு காண விடுவாரில்லை
சினத்தோடு வெறுப்பினையும்
மனத்தினிலே இருத்தி நின்றேன்
வீடு வாசல் நாசமாய் போகும்
விளையும் துயரம் இதனாலென்றே
எத்தனை பாடு தலையிலடிக்க,
அத்தனை வாக்கும் செவி வீழா
சித்தமே அதுவென வந்து சேர
குழந்தை ஒன்று இல்லத்தில்
குலவி மகிழ துயரம் விலக
கூடு குலைந்து குருவிகள்
தனித்தனி கூட்டுக்குள் முடங்கி
கிடந்த காலம் கிடப்பிலோட
மீண்டுமோர் வசந்த காலமாய்
கோலம் மாற்றிக் கும்மாளம்
நான்கு கால் ஜீவனால்
விளைந்த சந்தோச மேகம்
குழவியாக மாறின மனங்கள்
குழைந்து குழைந்து கொஞ்சின
இப்போ வெறுப்பே விருப்பாய்
இதுவே சுகந்தமாய் நிற்க
நான்கு கால் உயிரும்
நல்லாய்க் காலூன்றியதே…!!
சிவதர்சனி இராகவன்
16/1/2025

Nada Mohan
Author: Nada Mohan