திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வெறுத்ததே விருப்பதாய்…

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 2091

வெறுத்ததே விருப்புமாய்..

ஓடியாடி வளர்ந்த மக்காள்
ஓய்வு காண விடுவாரில்லை
சினத்தோடு வெறுப்பினையும்
மனத்தினிலே இருத்தி நின்றேன்
வீடு வாசல் நாசமாய் போகும்
விளையும் துயரம் இதனாலென்றே
எத்தனை பாடு தலையிலடிக்க,
அத்தனை வாக்கும் செவி வீழா
சித்தமே அதுவென வந்து சேர
குழந்தை ஒன்று இல்லத்தில்
குலவி மகிழ துயரம் விலக
கூடு குலைந்து குருவிகள்
தனித்தனி கூட்டுக்குள் முடங்கி
கிடந்த காலம் கிடப்பிலோட
மீண்டுமோர் வசந்த காலமாய்
கோலம் மாற்றிக் கும்மாளம்
நான்கு கால் ஜீவனால்
விளைந்த சந்தோச மேகம்
குழவியாக மாறின மனங்கள்
குழைந்து குழைந்து கொஞ்சின
இப்போ வெறுப்பே விருப்பாய்
இதுவே சுகந்தமாய் நிற்க
நான்கு கால் உயிரும்
நல்லாய்க் காலூன்றியதே…!!
சிவதர்சனி இராகவன்
16/1/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading