வேருக்கு உரமாகியவன்

ஜெயம்
விடியலை தந்து தன்னை சுருக்கிக்கொண்டது தீபம்
குடிகொண்ட தாகத்தினால் உயிரை கொடுத்து தியாகம்
இனத்தின் வாழ்வு செழிக்க
தன்னை அழித்த தன்மை
குணத்தால் அவனே தங்கம்
மண்ணின் மைந்தனென்பதே உண்மை
தன் சுகங்களையும் இன்னுயிரையும் தியாகம் செய்வதென்பது
மண்மைந்தனால் மட்டுமே கொடுக்கக்கூடிய அன்பது
இலட்சியங்களை அடைவதற்கு தனையிழக்கும் தன்மை அளப்பரி யது
மலரவேண்டியே தேசத்திற்காக தன்னையே அர்ப்பணிப்பது வரலாற்றுக்குரியது
தாயகத்திருக்காக வேண்டிய ஒரு சுயலமற்ற நேசத்தின் வெளிப்பாடு
தாயாய் சேயாய் பழகியதால் அவர்காக்க மூச்சையும் விட்டதந்த கூடு

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading