இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அகவையின் உயர்வு 671

செல்வி நித்தியானந்தன்
அகவையின் உயர்வு

அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும் விரைவாய் ஞாலமும் குளிராய்
சோகங்கள் பலதாய் சோர்ந்திடும் மனமாய்

முடியாது போய்விடினும் சொல்லும் உத்வேகம்
பிடித்துமே கையாலே பின்னாலே வருவதும்
இடிபட்டு இருந்தாலும் இன்னலும் போய்விடும்
இகழ்ச்சி இல்லாது எந்நாளும் உதவிடுவர்

மகிழ்ச்சி நாளுமே மனதில் கொண்டுமே
புகழ்ச்சி இன்றியே உதவியும் செய்திட
மகவும் உலகமே நானுமே வாழ்ந்திட
வலியாய் இன்றுமே அகவை கழிந்திட

பணமும் பரிசும் பகிர்ந்தே தந்திட
பாசமாய் என்றுமே பக்க பலமாய்
கனவுகள் சுமந்த வாழ்வின் பயணம்
கடக்குது கண்ணீர் கரைதனை நாடியே

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading