அகவை இருபத்தியெட்டா…

வசந்தா ஜெகதீசன்
அவனியின் முதலீடே
அகவை இருபத்தியெட்டா புதைநிலத்து பொக்கிசமாய் பூத்திட்ட ஒருநாள்
தடைகளையே படிகளாக்கி தன்னம்பிக்கை பதித்தது
தமிழுக்கே மகுடமிட்டு முதலொலியாய் ஒலித்தது
உருவாக்கத்திறனிலே உலகெல்லாம் வியந்தது
நாளந்தம் வித்தகத்தை வெற்றியெனச் சுமந்தது
எழுத்தாளர் வாரமது மகுடமென பூத்தது
எண்ணற்ற சேவை வளம் ஏற்றமாய் மலர்ந்தது
உருவாக்கும் ஊடகமாய் உலகிலே மிளிர்ந்தது
கலைக்குடும்பம் வாழ்க்கையினை காணிக்கையாய் ஈர்ந்தது
காற்றலையின் கம்பீரம் பாமுகமாய் பிரசவம்
தாசப்பத்தின் தனிநிலவே தன்னம்பிக்கை பாமுகமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading