” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அடிக்கல் அல்லது அத்திவாரம்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-44
09-07-2024

அடிக்கல் அல்லது அத்திவாரம்

வடக்கு வாசல் வீடதுவாம்
வட கிழக்கு சாமி அறையாம்
சிறு பவுண் போட்டு அத்திவாரமிட
சீராய் குடும்பம் சிறந்திடுமாம்

பன்னிரெண்டு ஆண்டு பல சிறப்பு
பவுணாய் குடும்பம் தழைத்தோங்க
பாளாய்ப் போன நோயொன்று
பாடாய்ப் படுத்த மரகதத்தை

சாஸ்திரி போட்ட அடிக்கல்லில்
சரியான பொருத்தம் வீட்டிலில்லை
கட்டிய வீட்டை எட்டு நாளில்
காலி பண்ணினர் குடும்பத்துடன்

கடவுள் போட்ட அத்திவாரத்தில்
கனவான வீடு வந்தமைய
மரகதம் உடலும் சிறுதேறு
மனங்களில் பலவாறு மாற்றங்களே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan