இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அன்னை

ராணி சம்பந்தர்

பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த இருப்பிடம் அன்னை

பாதந்தொட்டு வணங்கும் தாயே!
பத்து மாதக் கரு பிறந்து வளர்ந்து
தவழ்ந்து நடந்து பள்ளி சென்ற
பருவம் பூத்துத் துள்ளிய மனதில்

மணவறையில் கொட்டிய மேளம்
கட்டிய தாலியில் முட்டிய சொந்தம்
அதில் தானும் பிள்ளை பெற்ற
அன்னை பதவி உயர விருந்து
படைத்த உன் தாய்மடிக் கொழுந்து

பறித்து நட்ட மகள் மருமகள் எனப்
பல வடிவங்களில் ஒளியூட்டித்
தொடரும் அன்னையே வாழ்க .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading