நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

அன்னை

ராணி சம்பந்தர்

பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த இருப்பிடம் அன்னை

பாதந்தொட்டு வணங்கும் தாயே!
பத்து மாதக் கரு பிறந்து வளர்ந்து
தவழ்ந்து நடந்து பள்ளி சென்ற
பருவம் பூத்துத் துள்ளிய மனதில்

மணவறையில் கொட்டிய மேளம்
கட்டிய தாலியில் முட்டிய சொந்தம்
அதில் தானும் பிள்ளை பெற்ற
அன்னை பதவி உயர விருந்து
படைத்த உன் தாய்மடிக் கொழுந்து

பறித்து நட்ட மகள் மருமகள் எனப்
பல வடிவங்களில் ஒளியூட்டித்
தொடரும் அன்னையே வாழ்க .

Nada Mohan
Author: Nada Mohan