” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அன்னை

ராணி சம்பந்தர்

பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த இருப்பிடம் அன்னை

பாதந்தொட்டு வணங்கும் தாயே!
பத்து மாதக் கரு பிறந்து வளர்ந்து
தவழ்ந்து நடந்து பள்ளி சென்ற
பருவம் பூத்துத் துள்ளிய மனதில்

மணவறையில் கொட்டிய மேளம்
கட்டிய தாலியில் முட்டிய சொந்தம்
அதில் தானும் பிள்ளை பெற்ற
அன்னை பதவி உயர விருந்து
படைத்த உன் தாய்மடிக் கொழுந்து

பறித்து நட்ட மகள் மருமகள் எனப்
பல வடிவங்களில் ஒளியூட்டித்
தொடரும் அன்னையே வாழ்க .

Nada Mohan
Author: Nada Mohan