மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அன்பே இறைவன்

சிவதர்சனி இரா

தினக்கவி 2017!

அன்பே இறைவன்..

அன்பு வேண்டி அலையும் மனம்
இன்பம் காண்பது இல்லை தினம்
ஆன்மா லயிக்கும் கணமே நிதம்
இல்லை என்றிடாது கொடு நித்தம்

இறைக்கு நிகர் அன்பு தானே
இருப்பதைப் பகிர்வது சிறப்பு தானே
பேதமை காட்டாது விழி நீர் விலக்கி
பெருமை கொள்வது மானிடமாமே

ஆலய வழிபாடும் தேவை இல்லை
அல்லும் பகலும் தொழ தேவை ஏது
இல்லை என்றே வரும் போது
இருப்பில் துளியை ஈதல் பெரிதே

பசி போக்கி புன்னகை விரிக்க
பக்குவம் கொண்ட மனம் உண்டே
பண்பே மனிதம் இதுவாம் பாரும்
பாரில் பெருமை உண்டே நாளும்
சிவதர்சனி இராகவன்
29/8/2024

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading