பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அன்பே இறைவன்

சிவதர்சனி இரா

தினக்கவி 2017!

அன்பே இறைவன்..

அன்பு வேண்டி அலையும் மனம்
இன்பம் காண்பது இல்லை தினம்
ஆன்மா லயிக்கும் கணமே நிதம்
இல்லை என்றிடாது கொடு நித்தம்

இறைக்கு நிகர் அன்பு தானே
இருப்பதைப் பகிர்வது சிறப்பு தானே
பேதமை காட்டாது விழி நீர் விலக்கி
பெருமை கொள்வது மானிடமாமே

ஆலய வழிபாடும் தேவை இல்லை
அல்லும் பகலும் தொழ தேவை ஏது
இல்லை என்றே வரும் போது
இருப்பில் துளியை ஈதல் பெரிதே

பசி போக்கி புன்னகை விரிக்க
பக்குவம் கொண்ட மனம் உண்டே
பண்பே மனிதம் இதுவாம் பாரும்
பாரில் பெருமை உண்டே நாளும்
சிவதர்சனி இராகவன்
29/8/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading