” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

“மாற்றத்தின் திறவுகோல்” 06.01.2022

மாற்றத்தின் திறவுகோல்
நாமாக வேண்டும் /

மனத்தாலும் மதியாலும்
மலர்ந்திடல் வேண்டும் /

பணித்திடம் மனத்திடம்
பதித்திடல் வேண்டும் /

மாற்றமொன்றே மலர்சிதரும்
மதித்திடல் வேண்டும் /

தான்றிந்த வினையாவும்
தானமிடல் வேண்டும் /

விடாமுயற்சி விசுவரூபம்
விதைத்திட வேண்டும் /

சத்தமின்றி நித்தமுமே
சமரசம் வேண்டும் /

விட்டுகொடுத்து விடைபெறும்
வித்தைகற்க வேண்டும் /

முத்துப்பல் புன்னகையை
முதல்பரிசளிக்க வேண்டும் /

ஓயாத தொடர்கதை
ஓங்கிட வேண்டும் /

ஒவ்வொரு நாளுமே
ஒளிர்ந்திடல் வேண்டும் /

மாற்றத்தைப் பெற்றுத்தான்
மாமனிதனாக வேண்டும் /

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan