திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-261.
தலைப்பு!

பெருமை
……….
தனக்கென வாழா
பிறர்க்கென வாழ்வதே பெருமை!

சமுதாயத் தொண்டில்
தன்னை ஈடுபடுத்தி
மக்கள் நலன் கருதி
உழைப்பதே பெருமை!

இனத்தின் விடுதலை
எண்ணிக் களத்தில்
நிற்பதே
பெருமையிலும் பெருமை!

அன்னை தெரசா போல்
மனித நேயத்தில்
மனத்தைச் செலுத்தி
மாசற்ற மாதராய்
உழைப்பதே மாபெரும் பெருமை!

தன் மகனைச்
சான்றோர் அவையில்
அமர்த்தப் பாடுபடுவதே ஓர் ஒப்பற்ற தாயின் பெருமை!

தமிழீழ விடுதலையைப் படைத்துத் தற்சார்பு
நாடாண்டதே எங்கள்
தேசியத் தலைவரின்
பெருமை!

அடிப்படை மாற்றம்
அரசியல் மாற்றம்
களமாடும் எங்கள்
சிற்றப்பாவின் நாம் தமிழர் அரசியலே
உலகு போற்றும் பெருமை!

தனித்து வாழும் பெண்ணின்
துணிவே
பெருமை!

காலத்தை வெல்லும்
கவிதை புனைவதே
கவிஞர்க்குப் பெருமை!

ஏழை எளிய
ஒருவர்க்கு உதவுதல்
ஒப்பிலாப் பெருமை!

சந்தம் சிந்தும்
சந்திப்பில் கவிஎழுதுவதே
எனக்கும் – என்
தமிழுக்கும் பெருமை!

சுற்றுச்சூழல் காப்பதே
மானிடர்க்குப் பெருமை!

-அபிராமி கவிதாசன்
16.04.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading