23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
அபிராமி கவிதாசன்
பங்குனி
……………………….
பங்குனி பிறந்தது படுதுயர் பறந்தது
எங்களின் வாழ்வில் கவிதன் பிறந்தது
கவலைகள் மறைந்தது கருங்குயில் இசைத்தது
பொங்கிடும் அன்பில் பூமழை பொழிந்தது
பங்குனித் திங்கள் பதினே ழென்றால்
தங்கத் தமிழ்மகன் தாய்மண் தொட்ட
பங்கமே இல்லாப் பயன்படு நாளே
செங்கதிர் வீச்சாய்ச் சீர்சால் மழலை
தொங்கிடும் கைகளைத் தூக்கிய நாளே
எங்களின் திருநாள் என்றே மகிழ்ந்தோம்
எங்கள் விடுதலை இனப்போர் தன்னில்
தங்கைமா வீரராய்த் தன்னுயிர் ஈந்தாள்
எங்கவள் பிறப்பாள் என்றே எண்ணினேன்
இங்கவள் மகனாய் என்னுள் பிறந்தாள்
எங்கள் நிலாவே ஈடிலா கவிதனாய்
சங்கே முழங்கெனச் சாற்றும் குறளை
எங்கும் முழங்க இந்நாள் கண்டோம்!
பங்குனி மாதம் பனிபடர் அழகிய
திங்களைப் போற்றுதும்!
திங்களைப் போற்றதும் !
.ஆசிரியை
அபிராமி கவிதாசன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...