இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா
அறிவுக்கு இதுவொரு விருந்து
அறியாமையை நீக்கிடும் அருமருந்து
புத்தியை எட்டவைக்கும் பெட்டகம்
வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம்

வாசித்தால் அறிவும் விருட்சம்
நேரிய சிந்தனை சுரக்கும்
நேசி அறிவார்ந்த புத்தகத்தை
சுவாசி அதிலுள்ள தத்துவத்தை

கருத்துக்களை சுமந்த தாள்கள்
உருவாக்கும் ஆக்கத்தின் நூல்கள்
படித்தல் என்கின்ற பழக்கம்
கொண்டாலே ஏனிங்கு கலக்கம்

கற்றோர் அடைந்திடும் சொத்து
கற்பனை விருட்சத்தின் வித்து
ஆளுமையின் அதிகரிக்கும் ஆழம்
புத்தகப்புழுவானால் அனுபவம் நீளும்

தேடத்தேட ஞானம் உருகும்
புரட்டப்புரட்ட அறிவதும் பெருகும்
பருகப்பருக தேனாக இனிக்கும்
வார்த்தைகள் சுவைபோலில்லை முக்கனிக்கும்.

சித்தம் அனுதினமாய் சீரடைந்தது
இத்தரை வாழ்வும் பேறடைந்தது
புத்தகம் என்பது புத்தரைப்போல்
வித்தகனாக்கிடும் உயிர்ப்புள்ள நூல்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading