ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!!

ஆளுகின்றான் அடிபணிகிறோம்!!

வாழுகின்ற வாழ்க்கையிலே
வழி நெடுக பயணிப்பான்
ஆளுகின்ற அழுத்தக்காரன்
வீழ்ந்திடுவான் உழைப்பாலே
சோம்பலென்று கிடந்தாலோ
தூரம் விட்டே சென்றிடுவான்
துணிந்து நிற்கும் மனங்களில்
விரல் பற்றி சேர்ந்திடுவான்..

வங்கிகளில் குடியிருப்பான்
இங்கிதமும் தெரிந்திடுவான்
உயர்த்தி வைத்து அழகெனவும்
உணர்த்தி விட்டு புகழெனவும்
உரைத்துவிட்டு அறமெனவும்
அகராதி சொல்லிடுவான்
அகந்தைக் காரன் மட்டுமல்ல
அன்பெழுதும் இரக்கக் காரன்…
சிவதர்சனி இரா
5/3/2026

Author: