” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!!

ஆளுகின்றான் அடிபணிகிறோம்!!

வாழுகின்ற வாழ்க்கையிலே
வழி நெடுக பயணிப்பான்
ஆளுகின்ற அழுத்தக்காரன்
வீழ்ந்திடுவான் உழைப்பாலே
சோம்பலென்று கிடந்தாலோ
தூரம் விட்டே சென்றிடுவான்
துணிந்து நிற்கும் மனங்களில்
விரல் பற்றி சேர்ந்திடுவான்..

வங்கிகளில் குடியிருப்பான்
இங்கிதமும் தெரிந்திடுவான்
உயர்த்தி வைத்து அழகெனவும்
உணர்த்தி விட்டு புகழெனவும்
உரைத்துவிட்டு அறமெனவும்
அகராதி சொல்லிடுவான்
அகந்தைக் காரன் மட்டுமல்ல
அன்பெழுதும் இரக்கக் காரன்…
சிவதர்சனி இரா
5/3/2026

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading