இசை

ஜெயம்

இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு புகழ்பாட இதைவிட்டால் எது
மறந்துவிட சோகத்தை மருந்தாக அது

பிணிதனை தீர்த்துவிட இதுவன்றோ அருமருந்து
தனிமையிலும் செவிகளுக்கு இனிமையான விருந்து
கல்மனத்தை கரைத்துவிடும் இசையொரு அற்புதம்
உள்ளத்தை உருக்கி உயிருக்குள் கலந்துவிடும்

தன்னை மறந்து பறவையாக பறப்பார்
உண்ணும் உணவாக ஒருநேரம் எடுப்பார்
இன்னிசை என்பது நிகழ்த்தும் அதிசயத்தை
மண்வாழ் உயிர்களெல்லாம் அடையும் அச்சுகத்தை

தெய்வத்தோடு இணைக்கும் இசையொரு மெய்மொழி
மெய்யான உவகையை உருவாக்கும் தேனொலி
இசைக்குள்ளே தொலைபவர்கள் நாளாந்தம் கோடி
இசைகேட்டால் போகாதே செடிகொடியும் வாடி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading