மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இசை

ஜெயம்

இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு புகழ்பாட இதைவிட்டால் எது
மறந்துவிட சோகத்தை மருந்தாக அது

பிணிதனை தீர்த்துவிட இதுவன்றோ அருமருந்து
தனிமையிலும் செவிகளுக்கு இனிமையான விருந்து
கல்மனத்தை கரைத்துவிடும் இசையொரு அற்புதம்
உள்ளத்தை உருக்கி உயிருக்குள் கலந்துவிடும்

தன்னை மறந்து பறவையாக பறப்பார்
உண்ணும் உணவாக ஒருநேரம் எடுப்பார்
இன்னிசை என்பது நிகழ்த்தும் அதிசயத்தை
மண்வாழ் உயிர்களெல்லாம் அடையும் அச்சுகத்தை

தெய்வத்தோடு இணைக்கும் இசையொரு மெய்மொழி
மெய்யான உவகையை உருவாக்கும் தேனொலி
இசைக்குள்ளே தொலைபவர்கள் நாளாந்தம் கோடி
இசைகேட்டால் போகாதே செடிகொடியும் வாடி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading