” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இது என்ன விண்ணாணம்???

நகுலா சிவநாதன்

இது என்ன விண்ணாணம்???

காலைக்கடனை முடித்திட நீயும்
கண்ணுக்குள் தெரிகிறாய் அம்மா
விண்ணுக்குள் சென்றிட்டாய் யென
விண்ணாணம் சொன்னவர்கள் அன்று

மண்ணுக்குள் புதையுண்டாலும் ……
இரவு மணிக்கணிக்காய் என்னுடன் பேசினாய்
தீயின் சங்கமமானாலும் தீதொன்றும்
நீ செய்ததில்லை….அம்மா

உண்மையாய் நேற்று நீ பேசினாய்
உளமார நினைவாய் இருந்தேன்
நீண்டகாலம் பேசிவில்லையென்று……
அம்மா!! உனக்கொன்று நான் சொல்லணும்
ஆசையாய் எழுந்தேன் ………

அப்போ உன்னைக் காணவில்லை
அது என்ன? அம்மா அம்மா
ஐயய்யோ உணர்ந்தேன் அம்மா வந்தது
உண்மையல்ல…..
கனவேயென உணர்வே வந்தது

இது என்ன விண்ணாணம்
கனவா? காட்சியா?
காலம் தான் பதிலுரைக்கும்
ஏமாறும் நாமும் ஏமாற்றும் கனவும்
அற்பநேரம்தானோ!?
நினைத்துப் பார்க்கிறேன் யாவும் கனவே!!!

நகுலா சிவநாதன் 1802

Nada Mohan
Author: Nada Mohan