26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
இதெல்லாம் இப்ப எங்கே..
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக…
இதெல்லாம் இப்ப எங்கை..!!
மனிதர் என்ற போர்வையில்
மனதை முடக்கிய ஆசையில்
அலையும் ஜீவ இராசிகளே
கேளும் எங்கு மனித உரிமை..?
இனம் என்று அடக்கியே
இற்றை வரை ஓயாத போராகி
இழந்த உயிர்கள் எத்தனை
இதை மீட்டுத் தருவார் யாரையா..?
நாட்டுக்கு நாடு போராட்டம்
நாசமாகுது இயற்கை நீரோட்டம்
ஆயுத முனையில் அகங்காரம்
ஆட்டிப் படைக்குதே பணபலம்..!!
மனிதரை மனிதர் வீழ்த்திவிட
மண்ணில் எத்தனை சூதாட்டம்
நரம்பிலா நாக்கின் ஆர்ப்பாட்டம்
நரபலி கேட்குதே கலி காலம்..
பெண்ணின் வாயைப் பூட்டியே
வாழ்ந்த காலம் மலையேற்றம்
ஆயினும் திருமண வாழ்வியலும்
இரண்டாகும் பாதகம் குத்தாட்டம்..
உயர்வாய் ஆக்கிய ஒழுக்கங்கள்
உதாசீனம் ஆகுதே காலமாற்றம்
உரிமைகள் இழந்த பிறப்பாகி
உணர்வுகள் கசிவதே முடிவாமோ..
சிவதர்சனி இராகவன்
12/12/2024

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...