” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“இன்றைய உலகு”

நேவிஸ் பிலிப் கவி இல (365) 05/12/24

வியப்பாய் விசித்திரமாய்
பொருளாதாரப் புரட்சி
வசதி வாய்ப்பின் வளர்ச்சி
ஆடம்பர பொருட்களின் திரட்சி

உள்ளத் தளர்ச்சி
புறக்கணிப்பால் அயர்ச்சி
வெளிக்காட்டப்படாத
மறுத்தல்கள் மறுப்புக்கள்

வானுயர் மாட மாளிகைகள்
அங்கே வாழத்தான் மனிதர் இல்லை
பணத்துக்குப் பஞ்சமில்லை
அன்புக்குத்தான் பற்றாக் குறை

உணவுகள் கிடைக்குது வித விதமாய்
ஊட்டச்சத்து விகிதங்கள்
குன்றிப் போனதாய்
இல்லாமையும் தொடர் கதையாய்

தொலை தூரங்களை இணைக்க
நீண்ட நெடுஞ்சாலைகள்
குறுகிய நேரப் பயணங்கள்
ஆனால்
நெருங்கியவர்களிடம் பேச மனமில்லா
ஈரமற்ற நெஞ்சங்கள்.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan