இயற்கை 81

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-01-2026

காடு களனி அழித்து
கட்டடம் நீ வளர்த்தாய்
மலையைக் குடைந்து
மாளிகை எழுப்பினாய்

குளங்கள் அனைத்தையும்
குடியிருப்பாய் ஆக்கினாய்
பூமியின் நரம்பறத்தாய்
புவியதிர்ச்சிக்கு அதிர்ந்தாய்

மேகம் அழுகையில்
மனிதன் மிதக்கையில்
மண்ணும் சரிகையில்
மக்கள் புதைகையில்

மனதால் கலங்கினாய்
மாற்றுவழி கொண்டாயோ?
வீட்டுக்கொரு மரம் வளர்த்து
வீதியோரம் நெகிழி அகற்றி

இயற்கையை காத்து வர
இவளே எம்மை அரவணைப்பாள்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading