” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

சித்திரமே நீ
செயல் கொள்வாயா……………

சித்திரப்பதுமையாய் எந்தன்
சிந்தையுள் புகுந்து கொண்டாய்
பைந்தமிழ் உரையுள் என்னை
பகடையாய் உருட்ட வந்தாய்

என் தமிழ் அணங்கே உன்போல்
பெண்தனை உளத்தில் கொள்வேன்
தலைமையில் உன்னைத் தாங்க-என்
ஆயுளில் இடமே. இல்லை

உணர்வினுள் உயிரினுள் வேள்வியுள்
யாகத்தின் ஆகுதி ஆகி நின்ற
அத்தனை உயிர்ப்பின். நிறைவும் உன்
சதிதனில் சரிந்து. போமோ

வெந்தணல் சுமந்தோர் இன்றும்
வேகித்தம் வாழ்வைக் கடக்க -ஏன்
இத்தனை. போலி நிறைத்துன்
கபட நாடக முகத்திரைகள்

இன்னமும் நம்பி வீழ மூடரா நாமும்
இழந்தவர் கை தொடுத்து- அவர்
இதயத்தின் வடு களைந்து. -நாம்
தாய் நிலத்தின் வளத்தைக் காப்போம்

Nada Mohan
Author: Nada Mohan