பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

இரா.விஜயகௌரி

புழுதி வாரி எழும் மண் வாசம்…….

புழுதி வாரி எழும் மண் வாசம்
புனிதர் வாழ்ந்தெழுந்த உயிர் நேசம்
காலம் தொலைத்ததிந்த எங்கள் எழில் தேசம்
காத்துக் கிடத்தலிலே தொலைவாச்சே

எதனால் இழந்தோம் எம்மண் களைந்தோம்
புலம்பெயர் வாழ்வில் நமை இழந்தோம்
வாழிடம்தொலைத்து வருந்தி நாம் அழுது
மேதினி வாழ்வின் அழகிழந்தோம்

பசுமையின் தேசம் உறவுகள் நேசம்
உயிர்ப்பின் தாய் மொழி விலக்கி நின்றோம்
ஒற்றுமை எம்மிடம் இருந்திருந்தால்
அந்த இறுகிய தளையில் உயிர்த்திருப்போம்

எங்கே எங்கள்தாய்மடியோ
எங்கள் தலைமுறை விலகியதோ
பன்மொழி பயின்ற குழந்தைகளே
தமிழின் அழகினை தொலைத்தீரா

புழுதி வாரி எழும் மண்வாசம்
புனிதர்வாழ்ந்தெழுந்த உயிர்நேசம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading