இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..

வசந்தா ஜெகதீசன்
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..
வீணாண செலவுகள் விதவிதமாய்
விரையமாய் கரையுது தினம்தினமாய்
ஆடம்பர வாழ்வில் ஆசைகள் கூடி
அவரவர் தகுதியை விழாக்களில் காட்டி
சமுகவலைத்தள முகத்தில் மூழ்கி
அள்ளியே இறைக்கிறார் பணத்தினை வாரி..
ஊருக்குப் பணத்தை உழைத்தே அனுப்பி
உருகுலையும் சமூகத்தை கட்டியே எழுப்பி
சோம்பேறி வாழ்வை சொர்க்கமாய் நாடிட
அள்ளியே இறைக்கிறார்
பணத்தினை வாரி

இல்லாத விழாக்களை எமதாய் ஆக்கி
இயல்புக்கு மிஞ்சியே செலவினை கூட்டி
செல்வாக்கு காட்டிட செய்கிறார் பலதை
எதற்கென வினாக்கள் இல்லாத செலவு
இயல்புக்கு மிஞ்சிய ஆடம்பர அதிர்வு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading