இலட்சியம் கொள்வாய்

சர்வேஸ்வரி சிவருபன்

இலட்சியம் கொள்வாய்

அறிவையும் கூட்டியே அன்பையும் வளர்ப்பாயே
அறத்தின் பாதையிலும் ஓங்கிடவும் நிற்பாய்
அணியாய் எழுவாய் வளமது சிறக்கவும்
அவனியிலே என்றுமே ஒற்றுமையும் சேரவும்

பண்போடு பாசமும் பற்றிடவே வேண்டும்
பழக்கத்திலே என்னாளும் ஒழுக்கமும் வேண்டும்
பாரம்பரியங்களைப் பேணிடவும் வேண்டும்
பரிவும் மேலோங்கக் கருணையும் வேண்டும்
உண்மையின் பாதையில் உயர்வாய் எழுவாய்
ஊழல்கள் இல்லாத சூழல்களை உருவாக்கு
உணர்வுடன் என்றுமே விழித்துமே நடப்பாய்
உலகிற்கு நல்ல சேவைகளைச் செய்வாய்
கண்ணியப் பாதையிலே களங்கம் இல்லையே
திண்ணமாக உணர்வாய் திகழும் வாழ்வும்
பண்ணிய தர்மமும் உன்னையும் காக்கும்
எண்ணியே வாழ்வில் இலட்சியம் கொள்வாய்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading