” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இலட்சியம் கொள்வாய்

சர்வேஸ்வரி சிவருபன்

இலட்சியம் கொள்வாய்

அறிவையும் கூட்டியே அன்பையும் வளர்ப்பாயே
அறத்தின் பாதையிலும் ஓங்கிடவும் நிற்பாய்
அணியாய் எழுவாய் வளமது சிறக்கவும்
அவனியிலே என்றுமே ஒற்றுமையும் சேரவும்

பண்போடு பாசமும் பற்றிடவே வேண்டும்
பழக்கத்திலே என்னாளும் ஒழுக்கமும் வேண்டும்
பாரம்பரியங்களைப் பேணிடவும் வேண்டும்
பரிவும் மேலோங்கக் கருணையும் வேண்டும்
உண்மையின் பாதையில் உயர்வாய் எழுவாய்
ஊழல்கள் இல்லாத சூழல்களை உருவாக்கு
உணர்வுடன் என்றுமே விழித்துமே நடப்பாய்
உலகிற்கு நல்ல சேவைகளைச் செய்வாய்
கண்ணியப் பாதையிலே களங்கம் இல்லையே
திண்ணமாக உணர்வாய் திகழும் வாழ்வும்
பண்ணிய தர்மமும் உன்னையும் காக்கும்
எண்ணியே வாழ்வில் இலட்சியம் கொள்வாய்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan