இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 197
அகதி நாம் பெற்ற வரமா

விரும்பி நாம் பெற்ற பட்டமா
விருப்பமில்லாமல் எமக்கு தந்ததா
பெற்றோர்கள் செய்வது பிள்ளைக்கு
போல அரசாங்கங்கள் செய்வது பட்டம் எமக்கு

இங்கு மட்டுமா நாட்டிலும்
பலர் அகதியாக எம்மைப்போல்
பிறந்த இடத்தை விட்டு முயற்சியால்
வேறு இடத்தில் வாழ பெற்ற வரமா

ஆசிய ஆபிரிக்க நாட்டு மக்களும்
அகதி என பெற்ற வரமா
உக்கிரைன் மக்களும் எம்முடன் சேர
இங்கு எமக்கு பிறந்த பிள்ளைகள்
அகதியா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading