இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 199
அர்த்தமுள்ள இயற்கை
குளிர் சுமையாக வரும்பொழுது
இலைகளை விழுத்துகிறது மரம்
பழம் சாப்பிட வந்த பறவைகளை
மரங்கள் விரட்டியடிப்பதில்லை

நாம் காணும் அழகு ஓவியம்
இவ்வுலகில் வியக்கும் இயற்கை
வெய்யிலும் மழையும் மனிதன்
மனம்போல மாறிக்கொள்வது இயற்கை

நாம் செய்யும் தவறுகளை
பொறுத்தருளும் பூமித்தாய்
கோபம் வந்தவுடன் வெடித்து
சிதறுவதும் அர்த்தமுள்ள இயற்கை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading