உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-09-2025

நல்லூர் வீதியிலே
நல்லைக் கந்தன் சாட்சியாய்
நாட்டுமக்கள் நலனுக்காய்
நாட்டினாய் ஐந்து கோரிக்கை

தியாகத்தின் வலியை
தீர்க்கமாய் உணரா அரசு
உண்மை உரையை செவி
எடுக்கா இதயங்கள்.

தியாகப் பயணத்தின்
பன்னிரெண்டாம் நாள்,
ஊர் கூடி அழுதிருக்க
உலகெல்லாம் பார்த்திருக்க

தாகத்தோடு போராடி
தியாகத் தீயாய் நீ மாறி,
உண்ணா நோன்பிருந்து
உயிர்நீத்த மைந்தனே

சரித்திரத்தில் உன் பெயர்
சமாதியாய் பதித்தாயே.
இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading