உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-09-2025

நல்லூர் வீதியிலே
நல்லைக் கந்தன் சாட்சியாய்
நாட்டுமக்கள் நலனுக்காய்
நாட்டினாய் ஐந்து கோரிக்கை

தியாகத்தின் வலியை
தீர்க்கமாய் உணரா அரசு
உண்மை உரையை செவி
எடுக்கா இதயங்கள்.

தியாகப் பயணத்தின்
பன்னிரெண்டாம் நாள்,
ஊர் கூடி அழுதிருக்க
உலகெல்லாம் பார்த்திருக்க

தாகத்தோடு போராடி
தியாகத் தீயாய் நீ மாறி,
உண்ணா நோன்பிருந்து
உயிர்நீத்த மைந்தனே

சரித்திரத்தில் உன் பெயர்
சமாதியாய் பதித்தாயே.
இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading