14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
உதிர்கின்ற இலைகளே
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-38
17-10-2024
உதிர்கின்ற இலைகளே
உதிர்கின்ற இலைகளே
உதிரத்தில் இனம்
புரியா வலியும் சோகமும்
உதிர்ந்து போன உறவுகளா?
உதிர்ந்து கொண்டிருக்கும்
உறவுகளா? நினைவுகளா?
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
உன் புகழ் உலகறியும்!
இலைகள் உதிர்ந்தாலும்
மரங்கள் வாடுவது இல்லை
மீண்டும் புதிய இலை..
வாழ்வும் உணர்த்துகிறது
கணவனை பிரிந்து
வாடி வதங்கினாலும்
வலியற்று மீண்டு வா நீ
வாழ்வுண்டு உனக்கும்.
பச்சைக் கம்பளமாய்
பசும் சோலையாய்
பச்சையம் பலனளித்து
பலவாய் வாழ்ந்த நீ
வீழ்ந்து நீ சருகாவதும்
மிதந்து நீ எறும்புக்கு
ஒடமாவதும் கதையாகிடாமல்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...