உலகின் நிலை மாற என்னென்ன கொண்டுவருகிறாய்!

சிவதர்சனி இராகவன்

உலகின் நிலை மாற
என்னென்ன கொண்டுவருகிறாய்..

வியாழன் கவி 1918..
நிலைகொண்ட புவிமீது
நிறைவாகப் பிறந்தவளே
விலையற்ற உயிர்க்காக
விருதென்ன கொண்டு நீ
விரைந்தே வருகிறாய்…!

புதிதான உன்வரவால்
நம் பரிதாபம் போயிடுமோ
தினந்தோறும் அழிவுகளும்
திசைமாறிய மனங்களும்
விசையான படகெனவே
இதை மாற்ற வருவாயோ..!

அன்பென்ற ஒரு குடைக்குள்
அணைத்தெம்மை ஆள்வாயோ
இன்னும் எதிர்பார்ப்பை
ஏமாற்றம் ஆக்குவாயோ
எள்ளளவு சுகமதையும்
எமக்கீய வருவாயோ..!
சிவதர்சனி இராகவன்
11/1/2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading