” உழவும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A) ” உழவும் தமிழும் ” 22.01.2026

தமிழர்களின் பண்பாடு உழவு
தமிழர்களின் உயிர்மொழிதமிழ்
தமிழும் உழவும் உயிரின் இருகண்கள்
முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்
மண்பிளந்து பொன் விளைவிப்பது உழவு !

ஆதித்தமிழனின் நாவில் மலர்ந்தது அமுதத்தமிழ்
அவன் ஆர்வக் கைகளால்
அழகாய்ப் பிறந்தது உழவுத்தொழில்
தமிழுக்கு அடிப்படையாம் இலக்கணம்
உழவிற்கு அடித்தளமாம் நிலம்
உழவு நம்பண்பாடு அதுதருமே சாப்பாடு
தமிழர் பண்பாடு தமிழ் அதுதருமே அமுதத்தமிழ் !

உழவர் உழைப்பில்தான் உலகத்தவர் பிழைப்பு
உழவன் இல்லாத உலகம் இருளும்
உயிர்த்தமிழ் இல்லாது உணர்வும் இறக்கும்
உணர்வுபெற்றோம் நாம் தமிழாலே
உயிர்பெற்றோம் நாம் உழவாலே !

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading