உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு

உழைப்பே என்றும் உயர்வுதரும்
உனக்குள் உறுதி எடுத்திடுநீ
களைப்பே இன்றி உழைத்திடுநீ
காதல் வாழ்க்கை வாழ்ந்திடுவாய்
பிழைப்பே உனக்கு இருந்தாலே
பிறரும் சொல்வார் திறமையன்றோ!
மழையே பெய்து வரப்புயர
மண்ணே விளைந்து பயன்தருமே!

பற்றுக் கொண்டு வாழ்ந்திடுநீ
பாலர் அன்பு பெற்றிடுவாய்
உற்றுக் கேட்டு வளர்ந்தாலே
உலகில் உயர்வு பெற்றிடலாம்;
கற்றுக் கொண்டு உழைத்திடுநீ
காலம் உன்னை வரவேற்கும்
சுற்றி முற்றும் பார்த்திடுநீ
சுகமாய் வாழ உயர்ந்திடுநீ

நகுலா சிவநாதன் 1756

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading