உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு

உழைப்பே என்றும் உயர்வுதரும்
உனக்குள் உறுதி எடுத்திடுநீ
களைப்பே இன்றி உழைத்திடுநீ
காதல் வாழ்க்கை வாழ்ந்திடுவாய்
பிழைப்பே உனக்கு இருந்தாலே
பிறரும் சொல்வார் திறமையன்றோ!
மழையே பெய்து வரப்புயர
மண்ணே விளைந்து பயன்தருமே!

பற்றுக் கொண்டு வாழ்ந்திடுநீ
பாலர் அன்பு பெற்றிடுவாய்
உற்றுக் கேட்டு வளர்ந்தாலே
உலகில் உயர்வு பெற்றிடலாம்;
கற்றுக் கொண்டு உழைத்திடுநீ
காலம் உன்னை வரவேற்கும்
சுற்றி முற்றும் பார்த்திடுநீ
சுகமாய் வாழ உயர்ந்திடுநீ

நகுலா சிவநாதன் 1756

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading