” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எங்கே நிம்மதி

சிவருபன் சர்வேஸ்வரி

எங்கே நிம்மதி

எங்கே நிம்மதி என்று தேடிப்பார்க்கும் காலம் //
அங்கே இங்கேயென அலைபாயும் நினைவுகள் //

தூங்காமல் விழித்திருந்து வளர்த்த அன்னையோ //
அனாதை முகாமில் நிம்மதியைத் தொலைத்து //

சொத்துக்காக சொந்தங்களைப் பகைத்து தனிமையிலே //

வசந்த காலமாக இருந்த உறவுகள் //
பணமில்லை என்றே ஒதுக்கியும் வைப்பர் //

படித்தும் பண்பின்றி வார்த்தையும் ஆடலே //
ஒவ்வொன்றையும் பார்க்கும் இடத்தில் நிம்மதிவருமா //

புன்னகை என்னவிலை எனப்பாடிய கவிஞனுக்கு //

நிம்மதி என்னவிலை என்றும் தெரியவில்லையே /_
எங்கே தேடுகின்றேன் அதுவும் எட்டியே போகின்றது //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan