29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
ராணி சம்பந்தர்
எப்பவும் ஏங்கும் மனதிற்கோ
என்ன வேண்டும் சொல்லிடு
பொன் பொருள் இருக்கிறது
போதுமான பணம் வருகிறது
பின் என்ன பழையதுருளுதா
முற்றத்து நிலவில் அமர்ந்து
உண்ட சோற்றுக் குழையலா
கூட்டுவாழ்வின் தனிமையா
அகதி மண் அக்கம் பக்கமதில்
அரைகுறைப் பாஷை விளங்கி
விளங்காமலும் தேடும் சொல்
சிக்கி விக்கித் தவிக்குதா ?
தேங்கும் மனது தூங்காத
விழிகளில் என்னதான்
வேண்டுமெனச் சொல்லிடு.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.