அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

என்ன தான் வேண்டும்

ராணி சம்பந்தர்

எப்பவும் ஏங்கும் மனதிற்கோ
என்ன வேண்டும் சொல்லிடு
பொன் பொருள் இருக்கிறது
போதுமான பணம் வருகிறது

பின் என்ன பழையதுருளுதா
முற்றத்து நிலவில் அமர்ந்து
உண்ட சோற்றுக் குழையலா
கூட்டுவாழ்வின் தனிமையா

அகதி மண் அக்கம் பக்கமதில்
அரைகுறைப் பாஷை விளங்கி
விளங்காமலும் தேடும் சொல்
சிக்கி விக்கித் தவிக்குதா ?

தேங்கும் மனது தூங்காத
விழிகளில் என்னதான்
வேண்டுமெனச் சொல்லிடு.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading