என்ன தான் வேண்டும்

ராணி சம்பந்தர்

எப்பவும் ஏங்கும் மனதிற்கோ
என்ன வேண்டும் சொல்லிடு
பொன் பொருள் இருக்கிறது
போதுமான பணம் வருகிறது

பின் என்ன பழையதுருளுதா
முற்றத்து நிலவில் அமர்ந்து
உண்ட சோற்றுக் குழையலா
கூட்டுவாழ்வின் தனிமையா

அகதி மண் அக்கம் பக்கமதில்
அரைகுறைப் பாஷை விளங்கி
விளங்காமலும் தேடும் சொல்
சிக்கி விக்கித் தவிக்குதா ?

தேங்கும் மனது தூங்காத
விழிகளில் என்னதான்
வேண்டுமெனச் சொல்லிடு.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading