நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

என்ன தான் வேண்டும்

ராணி சம்பந்தர்

எப்பவும் ஏங்கும் மனதிற்கோ
என்ன வேண்டும் சொல்லிடு
பொன் பொருள் இருக்கிறது
போதுமான பணம் வருகிறது

பின் என்ன பழையதுருளுதா
முற்றத்து நிலவில் அமர்ந்து
உண்ட சோற்றுக் குழையலா
கூட்டுவாழ்வின் தனிமையா

அகதி மண் அக்கம் பக்கமதில்
அரைகுறைப் பாஷை விளங்கி
விளங்காமலும் தேடும் சொல்
சிக்கி விக்கித் தவிக்குதா ?

தேங்கும் மனது தூங்காத
விழிகளில் என்னதான்
வேண்டுமெனச் சொல்லிடு.

Nada Mohan
Author: Nada Mohan