சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

எல்லாளன்

வம்சம் என்றொரு சினிமா படம்.
வன்மம் தீர்த்தலே இலக்காய் களம்
அம்சம் ஒன்றிய உறவுகள் இடம்.
ஆத்திரம் மேவி கொலைவெறி வதம்
*ஆசை மனைவி மகன் மேலே கோபம்
அவனை தீர்க்கும் வெறிகொண்ட தீரம்
ஆளை ஊர்மீள செய்தான் ஓர் வஞ்சம்
அவனின்
தாய் உணவில் கலந்தானே நஞ்சும்.
* கொள்ளி வைப்புக்கு மகன் ஊர் மீள
கூடி சூழ்ந்தது கொலை கும்பல் ஆளை
தள்ளி மோதி இள மட்ட தனையன்
தலைகள் கொய்தனன் வீரமாய் தனியன்
*சொத்து பிரிவினை சோராத வஞ்சம்
செத்து மடிந்து சிறைக்குள்ளே
துஞ்சும்
மனை நிலம் காடாய் பாறியே போக
மதம் கொண்ட கோபம் வம்சமே மாள.
கதை என்ற போதும் கருத்துள்ள பாடம்
நெறி வழி இலக்கே பயனாய் கை
கூடும்

Nada Mohan
Author: Nada Mohan