இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

எல்லாளன்

வம்சம் என்றொரு சினிமா படம்.
வன்மம் தீர்த்தலே இலக்காய் களம்
அம்சம் ஒன்றிய உறவுகள் இடம்.
ஆத்திரம் மேவி கொலைவெறி வதம்
*ஆசை மனைவி மகன் மேலே கோபம்
அவனை தீர்க்கும் வெறிகொண்ட தீரம்
ஆளை ஊர்மீள செய்தான் ஓர் வஞ்சம்
அவனின்
தாய் உணவில் கலந்தானே நஞ்சும்.
* கொள்ளி வைப்புக்கு மகன் ஊர் மீள
கூடி சூழ்ந்தது கொலை கும்பல் ஆளை
தள்ளி மோதி இள மட்ட தனையன்
தலைகள் கொய்தனன் வீரமாய் தனியன்
*சொத்து பிரிவினை சோராத வஞ்சம்
செத்து மடிந்து சிறைக்குள்ளே
துஞ்சும்
மனை நிலம் காடாய் பாறியே போக
மதம் கொண்ட கோபம் வம்சமே மாள.
கதை என்ற போதும் கருத்துள்ள பாடம்
நெறி வழி இலக்கே பயனாய் கை
கூடும்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading