திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

எல்லாளன்

“மண முறிவு”. ஊராலே லண்டனுக்கு மணமகளாய் வந்து
உலகறிய அக்கினி முன் திருமணமும் கண்டு
ஆறாண்டில் ஆண்பெண்ணாய் இரு பிள்ளை ஈன்று
அழகு வீடு கடை இரண்டு தமதாக்கி கொண்டு
பேராக வாழ்ந்தவள் பின் மணமுறிவு என்று
பிரிந்திட்டாள் கணவனினை பத்தாண்டின் பின்பு
வீறாப்பாய் தனித்தாயாய் ஐந்தாண்டு வாழ்ந்த
விமலா என் முன் வந்து அழுகையுடன் சொன்னாள்.

அண்ணன் அக்கா சொந்தம் எந்த ஆதரவும் இல்லை
அவரவர்க்கு குடும்பமென ஆயிரமாய் தொல்லை
எண்ணி சில நண்பியுடன் பழகுகிற போதும்
எள்ளிநகை ஆடுகிறார் முதுகின் பின் தாமும்
எண்ணத்தில் தீயவராய் அவர் கணவன் மாரும்
என் வேலை தலத்திலும் பல காமக்கண் மேயும்
புண்ணாகி போகும் மனம் எவர் கோபத்தோடும்
புருஷனையே விட்டவளே என ஏசும் போதும்….

**வளர்ந்துவிட்ட பிள்ளைகட்கும் வாய்கூட நீளும்
வழிமாறும் செய்கையை நான் கண்டிக்கும் போதும்
உளத்தாலும் உடலாலும் தளர்ந்திட்டேன் நானும்
உண்மை இது சொல்ல மன
வீம்பு தடை போடும்
தளதளத்த குரலில் அவள் குமுறல் வெளிப்பாடு
தவறுணர்ந்த வனாக கணவன் நிலைப்பாடு
உளம் உடைந்து அவனும் தன் நிலை முன்பு சொன்னான்
ஒற்றுமையாய் இருவரையும் இணைத்து வைத்தேன் விரைவாய்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading